ஆப்நகரம்

சாய்னா நேவாலுக்கு அறுவை சிகிச்சை; 2 மாதம் ஓய்வு அவசியம்!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வெற்றிகரமாக, முழங்காலில் அறுவை செய்யப்பட்டுள்ளது. அவர், 2 மாத கட்டாய ஓய்வுக்குப் பின் மீண்டும் பயிற்சியை தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 20 Aug 2016, 9:34 pm
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வெற்றிகரமாக, முழங்காலில் அறுவை செய்யப்பட்டுள்ளது. அவர், 2 மாத கட்டாய ஓய்வுக்குப் பின் மீண்டும் பயிற்சியை தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil saina nehwal can resume practice in two months surgeon
சாய்னா நேவாலுக்கு அறுவை சிகிச்சை; 2 மாதம் ஓய்வு அவசியம்!


2012 ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பாக வெண்கலப் பதக்கம் வென்றவரும், பேட்மிண்டன் விளையாட்டில் உலக சாம்பியனாகவும் உள்ள சாய்னா நேவால், ரியோ ஒலிம்பிக்கில் பெரும் எதிர்பார்ப்புடன் பங்கேற்றார். எனினும், அவருக்கு ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயம் அதிக வலி கொடுத்த காரணத்தால், ரியோ ஒலிம்பிக்கின் தகுதிச் சுற்றுடன் அவர் வெளியேறினார்.

இந்தியா திரும்பிய சாய்னா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். இதன்முடிவாக, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இன்று காலை 6 மணியளவில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. வெற்றிகரமாக, அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், சாய்னாவின் உடல்நிலை முன்னேறியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த 2 மாதங்களுக்கு, சாய்னா கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும். அப்போதுதான் காயம் முழு அளவில் குணம் அடையும் என்றும், அதன்பின் அவர் வழக்கம்போல பேட்மிண்டன் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமாக, விளையாட்டு வீரர்களுக்கு முழங்காலில் ஏற்படும் காயத்தைப் போன்றதுதான் சாய்னாவுக்கும் ஏற்பட்டதாகவும், இதில் பயப்பட தேவையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்