ஆப்நகரம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெளியேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்நா நேவால் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளார்.

Samayam Tamil 28 Jun 2018, 8:17 pm
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்நா நேவால் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளார்.
Samayam Tamil 64777573


கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்நா நேவால் பங்கேற்றார்.

இதில், ஜப்பான் வீராங்கனை அகானே யமகூச்சியை எதிர்த்து விளையாடிய இவர் 15-21, 13-21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். அபாரமாக ஆடிய யகூச்சி 36 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்து அசத்தினார்.

சாய்னா யமகூச்சிக்கு எதிராக மோதிய கடைசி 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளார். 2014ஆம் ஆண்டு சீன ஓபனில் மட்டுமே சாய்னா யமகூச்சியை வென்றிருக்கிறார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்