ஆப்நகரம்

ஹாங்காங் ஓபனில் சாய்னா, சிந்து அடுத்தடுத்து காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவல் மற்றும் பிவி சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TOI Sports 24 Nov 2016, 9:38 pm
கவ்லூன்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவல் மற்றும் பிவி சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Samayam Tamil saina sindhu enter quarters of hong kong open
ஹாங்காங் ஓபனில் சாய்னா, சிந்து அடுத்தடுத்து காலிறுதிக்கு முன்னேற்றம்


ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் , ஜப்பானின் சயாகா சாடோவை எதிர்கொண்டார்.

இந்தியாவின் சாய்னா, ஜப்பானின் சயாகா சாடோவை , 21-18, 9-21, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதே போல் ஒலிம்பிக் வெள்ளி மங்கை பி வி சிந்து, சீன தைபேயை சேர்ந்த ஹூசுயா சிங் உடன் மோதினார். இதில் பி வி சிந்து 21-10 21-14 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம் சீனாவின் ஹூவாங் ஹூஜியாங் உடன் மோதினார். இதில் ஜெயராம் 21-18 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல் தேசிய சாம்பியனான சமீர் வெர்மா 19-21 21-15 21-11 செட் கணக்கில் ஜப்பானின் கஜூமசா சாகாயை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னெறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்