ஆப்நகரம்

பாராலிம்பிக் பதக்க வீரர்களுக்கு மணல்சிற்ப வாழ்த்து

ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 10 Sep 2016, 1:38 pm
ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sand artist sudarsan pattnaik wishes paralympic medalists in style
பாராலிம்பிக் பதக்க வீரர்களுக்கு மணல்சிற்ப வாழ்த்து


ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கமும் வருண் பாட்டி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவியும் நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனக்கே உரிய பாணியில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Congratulates #MariyappanThangavelu on winning gold, #VarunBhati for #bronze at #Paralympics .MySandArt at PuriBeach pic.twitter.com/ibRNEA6Ay4— Sudarsan Pattnaik (@sudarsansand) September 10, 2016
தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அரசு ரூ.75 லட்சமும் தமிழக அரசு ரூ.2 கோடியும் பரிசுத்தொகை அறிவித்திருக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்