ஆப்நகரம்

மீண்டும் வெற்றியுடன் திரும்பிய சானியா மிர்சா... இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஹோபர்ட்: நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மீண்டும் வெற்றியுடன் தனது பயணத்தை துவங்கியுள்ளார்.

Samayam Tamil 14 Jan 2020, 2:48 pm
சுமார் இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக டென்னிஸ் களத்திற்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தற்போது ஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கிறார். இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து பங்கேற்றார்.
Samayam Tamil Sania Mirza


வெற்றித் துவக்கம்
இதில் ஜார்ஜியாவின் அக்சானா மற்றும் ஜப்பானின் மியூ காடோ ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது. சுமார் ஒரு மணி மற்றும் 41 நிமிடங்கள் நடந்த போட்டியில் 2-6 7-6 (3) 10-3 என்ற செட்களில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் சானியா ஜோடி, அமெரிக்காவின் வானியா கிங் மற்றும் கிறிஸ்டினா மெக்ஹேல் ஜோடியை எதிர்கொள்கிறது.

காயங்கள் சோகம்
கடந்த 2018 ஏப்ரல் மாதம் ஆண் குழந்தைக்கு தாயான சானியா மிர்சா இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காயங்களை எதிர்கொண்டார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்று அசத்தியுள்ளார்.


இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்