ஆப்நகரம்

கோவக்கார செரினாவுக்கு அமெரிக்க கூட்டமைப்பு அபராதம்: பெண்கள் கூட்டமைப்பு ஆதரவுக்கரம்!

அம்பயருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 1:50 pm
நியூயார்க்: அம்பயருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற 138வது யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ஜப்பனின் நயோமி ஒசாகாவிடம் 2-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இதன் மூலம் ஜப்பானின் நயோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதல் முறை சாம்பியன்பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

திருட்டுப்பயலே:
இந்நிலையில் இப்போட்டியில் பயிற்சியாளிடம் ஆலோசனை பெற்றது . டென்னிஸ் ராக்கெட்டை சேதப்படுத்தியது, உள்ளிட்ட காரணத்துக்காக அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது. தவிர, அம்பயர் கார்லோஸ் ராமோசை திருடன் என்று திட்டினார். இதற்கும் அபராத புள்ளிகள் நயோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது.

மூன்றுவிதமான அபராதம்:
இதையடுத்து சேர் அம்பயருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதில் ரூ. 2,88,860 வெளியில் இருந்து பயிற்சி பெற்றதுக்காகவும், ரூ. 2,16,645 ஆத்திரத்தில் டென்னிஸ் ராக்கெட்டை வீசியதற்காகவும். ரூ. 7,22,150 சேர் அம்பயரை திருடன் என்று கூறியதற்காக மற்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காகவும் என மொத்தமாக ரூ. 12,27,655 அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு அபராதம் விதித்துள்ளது.

செரினாவுக்கு ஆதரவு:
இந்நிலையில் பெண்களுக்கான டென்னிஸ் கூட்டமைப்பான டபிள்யு.டி.ஏ., செரினாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தவிர, ஆண்களின் வெளிப்படுத்துவதைப்போல பெண்களும் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது பாரபட்சம் பார்க்ககூடாது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்