ஆப்நகரம்

இந்தியா-வங்கதேசம் போட்டியில் கிரிக்கெட் வர்ணனை செய்யவுள்ள ஷாருக்கான்

இன்றிரவு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடக்கவுள்ள டி20 கிரிக்கெட் உலக கோப்பை லீக் போட்டியில், வர்ணனையாளராக ஷாருக்கான் செயல்படவுள்ளார்

TNN 23 Mar 2016, 3:37 pm
பெங்களூரு: இன்றிரவு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடக்கவுள்ள டி20 கிரிக்கெட் உலக கோப்பை லீக் போட்டியில், வர்ணனையாளராக ஷாருக்கான் செயல்படவுள்ளார்.
Samayam Tamil shah rukh khan turns commentator for india bangladesh wt20 match
இந்தியா-வங்கதேசம் போட்டியில் கிரிக்கெட் வர்ணனை செய்யவுள்ள ஷாருக்கான்


இன்றைய போட்டியின் முதல் அரை மணி நேரம், பிரபல பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தருடன், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கமெண்ட்ரி களத்தில் இறங்கவுள்ளார்.

கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த டி20 போட்டியில் தான் கிரிக்கெட் வர்ணனை செய்வதாக இருந்தது. ஆனால், அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்று ஷாருக்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிகவும் தீவிர கிரிக்கெட் ரசிகரான ஷாருக்கான், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்