ஆப்நகரம்

யுஎஸ் ஓபன்: அரையிறுதிக்குள் நுழைந்த நடால்... : விடாமல் போராடிய தியாகோ!

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரபெல் நடால் தகுதி பெற்றார்.

Samayam Tamil 5 Sep 2019, 12:28 pm
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஸ்பெயின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் தியாகோவை எதிர் கொண்டார்.
Samayam Tamil Rafael Nadal


தியாகோ போராட்டம்
இதில் துவக்கம் முதல் நடாலுக்க் இணையாக தியாகோ கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் முதல் செட்டை 6-4 என நடா சுலபமாக வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 7-5 என போராடிய கைப்பற்றினார் நடால். மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நடால், 6-2 என மிகச்சுலபமாக வென்றார்.

பெடரர் ‘ஷாக்’ தோல்வி... 100வது வெற்றியை பதிவு செய்த செரினா!

முடிவில், ஸ்பெயின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் தியாகோவை 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


நினைவாகுமா கனவு...
இதன் மூலம் யுஎஸ் ஓபன் தொடரில் நடாலுக்கு மிகவும் கடினமான எஹ்டிரிகளாக கருதப்படும் ஜோகோவிச், பெடரர் ஏற்கனவே வெளியேறியதால், நடால் இம்முறை கோப்பை வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்