ஆப்நகரம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிறுமி முகத்தில் பந்தை அடித்த ரபெல் நடால்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால் தவறுதலாக சிறுமி மீது பந்தை அடித்தார். அதன் பின் அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 23 Jan 2020, 7:28 pm
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் பெர்டிகோ டெல்போனிஸை எதிர்கொண்டார்.
Samayam Tamil rafael nadal


இதில் துவக்கம் முதல் நடால் ஆதிக்கம் செலுத்தினார். இதன் முதல் செட்டை 6-3 என நடால் வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றிய நடால், மூன்றாவது செட்டை 6-1 என தனதாக்கினார். இறுதியில், ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் பெர்டிகோ டெல்போனிஸை 6-3, 7-6(4), 6-1 என வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மன்னிப்பு கேட்ட நடால்
இந்த போட்டியின் போது, நடால் அடித்த பந்து அம்பயர் சேர் அருகே நின்று கொண்டிருந்த பந்தை எடுக்கும் சிறுமியின் முகத்தில் நேரடியாக பட்டது. இதைப்பார்த்து பதறிய நடால் உடனடியாக அந்த சிறுமியிடம் சென்று நலம் விசாரித்தார். அதன் பிறகு அந்த சிறுமிடம் மன்னிப்பு கேட்டு முத்தமிட்டார். நடாலின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டினர்.


போட்டிக்கு பின் இந்த சம்பவம் குறித்து பேசிய நடால் கூறுகையில், “இது போட்டியின் சிறந்த தருணமல்ல. அந்த சிறுமியை நினைத்து நான் பயந்துவிட்டேன். பந்து வேகமாக சென்று நேரடியாகவே அவரின் முகத்தில் தாக்கியது. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என உறுதி செய்தபின் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. மிகவும் துணிச்சலான சிறுமி” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்