ஆப்நகரம்

பந்தயத்தில் தோற்றதால் பேப்பரை சாப்பிட்ட மானஸ்தன்

கோண்டினெண்டல் ஐஸ் ஹாக்கில் லீக்கில் வெற்றியை தவறாக கணித்த விளையாட்டு செய்தியாளர், தான் பந்தயத்தில் தோற்றதால் பேப்பரை சாப்பிட்டுள்ளார்.

TOI Sports 21 Feb 2017, 4:09 pm
கோண்டினெண்டல் ஐஸ் ஹாக்கில் லீக்கில் வெற்றியை தவறாக கணித்த விளையாட்டு செய்தியாளர், தான் பந்தயத்தில் தோற்றதால் பேப்பரை சாப்பிட்டுள்ளார்.
Samayam Tamil sports editor eats own newspaper after losing bet
பந்தயத்தில் தோற்றதால் பேப்பரை சாப்பிட்ட மானஸ்தன்


கோண்டினெண்டல் ஐஸ் ஹாக்கில் லீக் போட்டி ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வரும் இந்த போட்டியில் கிட்டத்தட்ட 28 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன.



பெலாரசை சேர்ந்த பிரஸ் பால் என்ற செய்திதாளில் பணியாற்றும் தலைமை விளையாட்டு செய்தியாளர் வியாச்சிஸ்லவ் பெடரண்கோவ், கோண்டினெண்டல் ஐஸ் ஹாக்கில் லீக்கில் நடந்த ரஷ்யா -பெலாரஸ் அணிகள் மோதிய போட்டிக்கு முன்பு பந்தயம் கட்டினார். ரஷ்யா தோற்றால் நான் பேப்பர் திண்கிறேன் என்றார். இந்த போட்டியில் ரஷ்யா கிளப் அணி வெல்லும் எனவும், அதே போல போட்டியில் ஆதிக்கமும் செய்தது.






இந்நிலையில் அதிர்ச்சிகரமாக பெலாரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து பந்தயத்தில் தோற்ற வியாச்சிஸ்லவ் பெடரண்கோவ் பேப்பரை தண்ணீர்ல் ஊறவைத்து அனைவரின் முன்பு திண்று தான் மானஸ்தன் என்பதை நிரூபித்தார். மேலும் தனக்கு பிடித்த அணிக்காக என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்