ஆப்நகரம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டன் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 8:45 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Samayam Tamil badmitaon1-777x437


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் ஆண்கள் பிரிவுக்கு தலைமை வகிக்க உலக தரவரிசையில் 7ஆம் இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் 13வது இடத்தில் உள்ள ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பிவி சிந்து மற்றும் 10வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் ஆகியோர் பெண்கள் பிரிவுக்கு தலைமை வகிப்பார்கள்.
7 பேர் பல்வேறு தகுதிப் போட்டிகளிலிருந்து தேர்வாகியுள்ளனர். அவர்களில் 6 பேர் முதல் முறையாக இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டியில் விளையாட உள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018ல் பேட்மிண்டன் போட்டிகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்