ஆப்நகரம்

வறுமை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை விற்க முன் வந்த வீராங்கனை..!

வறுமை காரணமாக சிட்னி ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கத்தை விற்க முன் வந்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த தடகள வீராங்கனை.

TNN 4 Jun 2017, 4:40 pm
வறுமை காரணமாக சிட்னி ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கத்தை விற்க முன் வந்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த தடகள வீராங்கனை.
Samayam Tamil srilankan olympic medalist try to sale her silver medal
வறுமை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை விற்க முன் வந்த வீராங்கனை..!


கடந்த 2000-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் , 200 மீட்டர் தடகள போட்டியில் இலங்கை வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுசந்திகா, ”இரண்டு பிள்ளைக்கு தாயான என்னால் குடும்ப வறுமையை சமாளிக்க முடியவில்லை. எனக்கு இலங்கை விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒரு ஆண்டுக்கு முன்னர் இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக எனக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பதவிக்கான ஊதியம் எனக்கு அளிக்கப்படவில்லை. குடும்ப வறுமையை போக்க வேறு வழியில்லாமல், சிட்னி ஒலிம்பிக்கில் நான் பெற்ற வெள்ளிப்பதக்கத்தை விற்க முடிவு செய்துள்ளேன்.” என தெரிவித்தார்.

சுசிந்திகாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெய்செக்கற, ”சுசந்திகாவுக்கு மாதம் 60,000 ரூபாய் ஊதியம் கிடைக்கும் ஆலோசகர் பதவி அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த பதவியை ஏற்க சுசந்திகாதான் தயாராக இல்லை.” என கூறியுள்ளார்.

மேலும் ”சுசந்திகா தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பதவியில் எப்போது வேண்டுமானாலும் இணையலாம்.” என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

Srilankan Olympic medalist try to sale her Silver medal

அடுத்த செய்தி

டிரெண்டிங்