ஆப்நகரம்

உலக புகழ்பெற்ற உலகக் கோப்பை கால்பந்து மணல் சிற்பம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குவதை முன்னிட்டு, அதை வரவேற்கும் வகையில் சுதர்சன் பட்னாயக் மணல் சிற்பம் வடித்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2018, 7:26 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குவதை முன்னிட்டு, அதை வரவேற்கும் வகையில் சுதர்சன் பட்னாயக் மணல் சிற்பம் வடித்துள்ளார்.
Samayam Tamil football


21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகிறது.

மணல் சிற்பம் :
இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடா விட்டாலும், இந்தியாவிலும் கால்பந்து ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றன. கால்பந்து பார்க்க அதிக டிக்கெட் வாங்கிய நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, சினா நாடுகளை அடுத்து இந்திய ரசிகர்கள் தான் அதிக டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக, ஒடிசா, பூரி கடற்கரையில், பிரபல மணல் சிறப கலைஞர் சுதர்சன் பட்னாயக் கால்பந்துடன் கூடிய உலகக் கோப்பையை மணல் சிற்பமாக வடித்து அசத்தியுள்ளார்.




அதில், இந்த கால்பந்து அமைதி மற்றும் நட்புறவை ஏற்படுத்தட்டும் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்