ஆப்நகரம்

விபத்தில் தங்கமகன் தங்கவேலுவுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை!!

பிரேசிலின் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளி[ல் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உயரத்துடன் பல சோதனைகளையும் தாண்டி சாதித்துள்ளார்.

TOI Sports 10 Sep 2016, 5:53 pm
ரியோ: பிரேசிலின் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளி[ல் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உயரத்துடன் பல சோதனைகளையும் தாண்டி சாதித்துள்ளார்.
Samayam Tamil thangavelu fought poverty disability to win gold at rio paralympics
விபத்தில் தங்கமகன் தங்கவேலுவுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை!!


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தின் பெரியவடகம்பட்டியைச்சேர்த்த 21 வயதான மாரியப்பன் தங்கவேலு. இவரது இளமை கால முழுவதும் சோகத்தால் தான் நிறைந்துள்ளது. தனது ஐந்தாவது வயதில் பஸ் விபத்தில் தனது காலை இழந்தார்.

இதற்கு நியாயம் கேட்டு தங்கவேலுவின் குடும்பத்தார், இன்றுவரை சுமார் 16 ஆண்டுகளாக கோர்ட் வாசல் ஏறிக்கொண்டே உள்ளனர். ஆனால் இன்னும் அவருக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. ஆனாலும் தங்கவேலு தளராத மனதுடன் போராடி வருகிறார்.

இதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் தங்கவேலுவின் தந்தையும் இவர்களது குடும்பத்தைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் இவரது தாயார் சரோஜா, தனியாளாக நாளுக்கு ரூ. 150 முதல் ரூ.200 வரை சம்பாதித்து இவரை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.

இதன்பின் பெங்களுரு பயிற்சியாளர் சத்யநாராயணன் உதவியுடன் தனது சாதனை பயணத்தை தொடங்கியுள்ளார் தங்கவேலு. இதன்பின் கடினமான பயிற்சியின் மூலம் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகளின் தங்கம் வென்று தங்கவேலு அசத்தியுள்ளார்.


இந்த செய்தியை தெலுங்கில் படிக்க:

http://telugu.samayam.com/sports/paralympics/rio-paralympics-gold-medalist-mariyappan-thangavelu-family-background-story/articleshow/54265537.cms

அடுத்த செய்தி

டிரெண்டிங்