சென்னை: 57வது தேசிய தடகளப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 5000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் மற்றும் வீராங்கனை சூர்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.
தமிழ்நாடு தடகளம் சார்பில் 57வது தேசிய தடகளப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நேற்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 950 வீரர்-வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர்.
இதில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் சர்வீசஸ் வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 04.21 வினாடியில் பந்தயத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதேபோல், பெண்கள் பிரிவில் ரெயில்வே வீராங்கனை சூர்யா 16 நிமிடம் 02.85 வினாடியில் பந்தயத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தங்கம் வென்ற இருவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Two athletes from Tamilnadu have secured Gold in the 57th National open athletics championship.
தமிழ்நாடு தடகளம் சார்பில் 57வது தேசிய தடகளப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நேற்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 950 வீரர்-வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர்.
இதில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் சர்வீசஸ் வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 04.21 வினாடியில் பந்தயத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதேபோல், பெண்கள் பிரிவில் ரெயில்வே வீராங்கனை சூர்யா 16 நிமிடம் 02.85 வினாடியில் பந்தயத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தங்கம் வென்ற இருவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Two athletes from Tamilnadu have secured Gold in the 57th National open athletics championship.