ஆப்நகரம்

மூன்று வருஷத்துக்கு பின் கோப்பை வென்ற செரீனா... வெற்றி பணத்தை காட்டுத்தீக்கு கொடுத்து அசத்தல்!

ஆக்லாந்து: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஆக்லாந்து டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் சுமார் 3 ஆண்டுக்கு பின் முதல் கோப்பை வென்று சாதித்தார் செரினா.

Samayam Tamil 12 Jan 2020, 2:22 pm
நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்பாக ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் பங்கேற்றார்.
Samayam Tamil Serena Williams


முதல் கோப்பை
இதன் ஃபைனலில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்ட செரினா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ் 6-4 என சுலபமாக வென்றார். இறுதியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

3 ஆண்டுகள்
இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் சுமார் 3 ஆண்டுக்கு பின் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தினார் செரினா வில்லியம்ஸ். இவர் கடைசியாக கடந்த 2017 இல் கோப்பை வென்றிருந்தார். இதன் மூலம் தாயான பின் முதல் முறையாக கோப்பை வென்று சாதித்தார் செரினா.

73ஆவது பட்டம்
மேலும் சர்வதேச அளவில் செரினா வெல்லும் 73ஆவது பட்டமாக இது அமைந்தது. மேலும் இத்தொடரில் செரினா வென்ற மொத்த பரிசுத்தொகையான 43,000 அமெரிக்க டாலர்களை ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்கு வழங்கினார் செரினா வில்லியம்ஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்