ஆப்நகரம்

நரசிங் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு : என்.ஏ.டி.ஏ., !

இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஊக்கமருந்து சர்ச்சை விவகாரத்தில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என என்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

TOI Contributor 31 Jul 2016, 1:02 am
புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஊக்கமருந்து சர்ச்சை விவகாரத்தில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என என்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
Samayam Tamil verdict on wrestler narsingh yadav deferred to monday
நரசிங் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு : என்.ஏ.டி.ஏ., !


பிரேசிலின் ரியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய மல்யுத்தவீரர் நரசிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனை முடிவு இவருக்கு எதிராக வந்ததையடுத்து இவருக்கு பதிலாக பிரவீண் ரானா மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக என்.ஏ.டி.ஏ.,வில் நடந்த மாரத்தான விசாரணையில் இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 1ல்) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்.ஏ.டி.ஏ., டி.ஜி., நவின் அகர்வால் கூறியது: நரசிங் யாதவின் வழக்கில் 8 மணி நேரத்துக்கு மேலாக மாரத்தான் கூட்டம் நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் வழ்க்கின் முழுவிவரங்களையும் விசாரணைக்குழு படித்து தீர்மானிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது. இவ்வழக்கில், வரும் ஆகஸ்ட் 1ல் மாலை 4 மணியளவில் குழுவினர் தங்களின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அகர்வால் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்