ஆப்நகரம்

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த விஜய் சேதுபதி!

சென்னை: புரோ கபடி லீக் தொடரின் முதல் ஆட்டத்தைக் காண நடிகர் விஜய் சேதுபதி சென்றார்.

Samayam Tamil 7 Oct 2018, 9:51 pm
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியை, தமிழ் தலைவாஸ் அணி திறமையுடன் எதிர்கொண்டது.
Samayam Tamil Vijay Sethupathi


இந்தப் போட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டனர். இவர்களை ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஆட்டத்தைக் காண நேரில் வந்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தின் இடையே அவரைக் காண முடிந்தது. இவர் புரோ கபடி லீக்கின் தமிழ்நாட்டின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரைக் கண்ட வர்ணனையாளர் முன்னணி தமிழ் நடிகர் விஜய் சேதுபதி ஆட்டத்தைக் காண வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

Vijay Sethupathi came to see Pro Kabaddi League's Tamil Thalaivas match.

அடுத்த செய்தி

டிரெண்டிங்