ஆப்நகரம்

ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை... 2020 ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது!

சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருத்து எதிர்ப்பு ஏஜென்சியின் (டபிள்யு.ஏ.டி.ஏ) சிறப்புக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊக்கமருத்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் சர்வதேச அளவிலான ஒலிம்பிக், உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Contributed by Srinithii |Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 Jul 2023, 6:55 pm
சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருத்து எதிர்ப்பு ஏஜென்சியின் (டபிள்யு.ஏ.டி.ஏ) சிறப்புக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊக்கமருத்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் சர்வதேச அளவிலான ஒலிம்பிக், உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil wada bans russia for four years from international events
ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை... 2020 ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது!


​மிகப்பெரிய போட்டிகள்

இதனால் வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் விண்டர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2022 காலபந்து போன்ற மிகப்பெரிய போட்டிகளில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது. ஒலிம்பிக்கில் ரஷ்ய கொடியை பயன்படுத்தவோ அல்லது ரஷ்ய தேசி கீதம் இசைக்கவோ அனுமதியில்லை.

தனிக்கொடி

ஆனால் போட்டிகளில் ஊக்கமருந்து பின்னணி இல்லாத ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தனிக்கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம். கடந்த 2014இல் சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டது.

13 தங்கப்பதக்கம்

இதையடுத்து 2018இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 168 ரஷ்ய வீரர்கள் தனிக்கொடியின் கீழ் பங்கேற்று, 13 தங்கப்பதக்கம் உட்பட 33 பதக்கங்கள் வென்றனர். கடந்த 2015 முதலே ரஷ்யா நேர்மையான செயல்பட தவறியதால், இந்த தடை முடிவு எடுக்கப்பட்டதாக டபிள்யு.ஏ.டி.ஏ தலைவர் கிரேக் ரீடி தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் போதாது

ஆனால் டபிள்யு.ஏ.டி.ஏ துணைத்தலைவர் லிண்ட இந்த 4 ஆண்டுகள் தடை என்பது ரஷ்யாவுக்கு போதாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறுகளை திருத்திக்கொள்ள வழங்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் வீண்டித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்