ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு திபா நன்றி !

ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக்குழு அமைத்த பிரதமர் மோடிக்கு திபா கர்மாக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

TOI Sports 27 Aug 2016, 8:06 am
புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக்குழு அமைத்த பிரதமர் மோடிக்கு திபா கர்மாக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil want to thank sir i hope we get many medals in the coming olympics
பிரதமர் மோடிக்கு திபா நன்றி !


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா சார்பில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இருப்பினும் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து (வெள்ளிப்பதக்கம்), மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (வெண்கலம்) என இந்தியாவுக்கு வெறும் இரண்டு பதக்கம் மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து 2020, 2024, 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக்குழுவை அமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவிட்டார். இந்த குழு வீரர், வீராங்கனைகள் தேர்வு உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் அசத்திய இந்திய வீராங்கனை திபா கர்மாக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திபா கூறியது:
ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக்குழு அமைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், இந்தியாவில் இளைஞர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். இதனால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிச்சயம் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு திபா கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்