ஆப்நகரம்

பரிதாபம்! - கால்பந்து போட்டியின் நடுவே உயிரை விட்ட கோல் கீப்பர்

இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியின் நடுவே பெர்சீலா லமோங்கன் அணி கோல் கீப்பர் சொய்ரூல் ஹூடா காயத்தால்,மைதானத்திலேயே உயிரிழந்தார்.

TOI Sports 15 Oct 2017, 9:59 pm
இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியின் நடுவே பெர்சீலா லமோங்கன் அணி கோல் கீப்பர் சொய்ரூல் ஹூடா காயத்தால்,மைதானத்திலேயே உயிரிழந்தார்.
Samayam Tamil watch indonesian goal keeper choirul huda dies after mid game collision
பரிதாபம்! - கால்பந்து போட்டியின் நடுவே உயிரை விட்ட கோல் கீப்பர்


இன்று இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியில் பெர்சீலா லமோங்கன் அணியும், சிமென் பெடங்க் அணியும் விளையாடியது.

இந்த போட்டி நடந்து கொண்டிருந்த போது, சிமென் பெடங்க் அணி வீரர் மார்சல் சக்ரமெண்டோ கோல் அடிக்க பந்தை பெர்சீலா லமோங்கன் கோல் கம்பம் அருகே கொண்டு வந்தார்.

அப்போது கோல் போடுவதை தடுக்க பெர்சீலா லமோங்கன் கோல் கீப்பர் சொய்ரூல் ஹூடா முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மார்சலின் கால், கோல்கீப்பர் சொய்ரூல் ஹூடா மீது பலமாக மோதியது.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே சிறிது நொடிகளில் மயங்கி விழுந்தார் சொய்ரூல் ஹூடா. பின்னர் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விரைவாக எடுத்து வரப்பட்டது. இருப்பினும், அவரை கோல்கம்பத்திலிருந்து மைதானத்தின் ஓரத்திற்கு அருகே கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் முதல் உதவி அளித்தும் பயனளிக்காமல் போனது. இதையடுத்து மைதானமே சோகத்தில் உறைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்