ஆப்நகரம்

அடுத்தாண்டு பள்ளி பாடத்திட்டம் 50% ஆக குறையும் - மத்திய விளையாட்டு அமைச்சர்

இந்தியாவில் அடுத்தாண்டு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Aug 2018, 3:04 pm
இந்தியாவில் அடுத்தாண்டு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajyavardhan Singh Rathore


2004ல் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டபிள் டிராப் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து 2006ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றார். அது மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் நடந்த பல்வேறு துப்பாகிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.

இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் 2013ல் பாஜக.,வில் சேர்ந்து, 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஜெய்பூர் தொகுதியில் வென்றார். தற்போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

பாட திட்டம் 50% குறையும்:
ஆசிய விளையாட்டு போட்டி குறித்து வீரர்களின் திறமை குறித்து டுவிட்டுகள் போட்டு வரும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பள்ளியில் விளையாட்டி முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “2019ல் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் 50 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் விளையாட்டு பிரிவு கண்டிப்பாக இருக்க வேண்டும் என திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.


மைதானங்கள் வாழ்க்கைக்கான பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுக்க வல்லது. விளையாடுவதன் மூலம் சிக்கலான தருணங்களில் ஒருவரின் குணாதிசயம், குழுப்பணி, தலைமை பண்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்