ஆப்நகரம்

அரையிறுதியில் மேரி கோம் ஏமாற்றம்: புது சாதனையுடன் வெண்கலம் வென்று ஆறுதல்...!

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடை ந்தார்.

Samayam Tamil 12 Oct 2019, 11:42 am
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷ்யாவில் நடக்கிறது. இதன் 51 கிலோ கிராம் எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் பங்கேற்றார். இதன் காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற கொலம்பியாவின் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார்.
Samayam Tamil Mary kom 1


இதன் மூலம் அரையிறுதிக்கு மேரி கோம் தகுதி பெற்றார். அரையிறுதியில் மேரி கோம், துருக்கியின் புசினாஸை எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரி கோம் , 1-4 என தோல்வியடைந்தார்.

இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் 8வது முறையாக பதக்கம் வென்று அசத்தினார். இந்த அரையிறுதி தோல்வியால், மேரி கோம் வெண்கலப்பதக்கம் வென்றார்.


8வது பதக்கம்
முன்னாத கடந்த 2001ல் மேரி கோம் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து 2002, 2005, 2006, 2008, 2010, 2018 என ஆறு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்[ மேரி கோம். தற்போது உலக சாம்பியன்ஷிப் தொடரில் 8வது பதக்கம் வென்று சாதித்துள்ளார் மேரி கோம்.

முதல் நட்சத்திரம்...
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் அரங்கில் மொத்தம் 8 பதக்கங்கள் வென்ற முதல் நட்சத்திரம் என்ற புது சாதனை படைத்துள்ளார். இப்பட்டியலில் கியூபாவின் பெலிக்ஸ் 7 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அயர்லாந்தின் டெய்லர் (6 பதக்கம்) அடுத்த இடத்தில் உள்ளார்.


தவறான முடிவா...?
இந்த அரையிறுதியின் நேரலை வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேரி கோம், ‘ எப்படி? மற்றும் ஏன்? இந்த முடிவு எவ்வளவு சரி.. தவறு என உலகிற்கு தெரியட்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அம்பயர்களின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பயர்களின் முடிவுக்கு எதிராக இந்தியா சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்