ஆப்நகரம்

மீண்டும் மரினிடம் வீழ்ந்த சிந்து : வெள்ளிப்பதக்கம் வென்று ஆறுதல்!

உலக பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி. சிந்து, ஸ்பெயினின் கரோலின் மரினிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Samayam Tamil 5 Aug 2018, 2:35 pm
நான்ஜிங்: உலக பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி. சிந்து, ஸ்பெயினின் கரோலின் மரினிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Samayam Tamil Dj0h4cRXsAAOOX8


சீனாவின் நான்ஜிங்கில் உலக பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

மற்றொரு ஒலிம்பிக்....
இந்நிலையில் கடந்த 2016ல் ரியோ நகரில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், சிந்து, மரினிடம் போராடி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் இந்த உலக சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றொரு ஒலிம்பி ஃபைனலாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து நடந்த இப்போட்டியில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, கடைசி நேரத்தில் சொதப்பியதால் முதல் செட்டை 19-21 என கோட்டைவிட்டார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் மிரட்டிய மரின், 11-2 என எட்டமுடியாத முன்னிலை பெற்றார். இதையடுத்து இந்த செட்டையும் 10-21 என சிந்து இழந்தார்.

முடிவில், பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்