ஆப்நகரம்

Saina Nehwal: காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி

உலக பேட்மிண்டன் போட்டித் தொடர் காலிறுதிப் போட்டியில் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Samayam Tamil 3 Aug 2018, 12:26 pm
நான்ஜிங் :உலக பேட்மிண்டன் போட்டித் தொடர் காலிறுதிப் போட்டியில் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
Samayam Tamil saina nehwal


சீனாவின், நான்ஜிங்கில் உள்ள நான்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் இந்த போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. .

ஜூலை 30ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10வது உலக பேட்மிண்டன் போட்டித் தொடர் நடைப்பெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் - ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இதில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் முதல் செட்டை 6-21 என எளிதாக கைப்பற்றினார்.
இரண்டாவது சுற்றில் சற்று சமாளித்து சாய்னா ஆடினாலும் 2வது செட்டையும் 11-21 என்ற புள்ளி கணக்கில் தோற்றார்.

இதனால் 6-21,11-21 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா மரினிடம் தோற்று சாய்னா நேவால் தொடரிலிருந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்