ஆப்நகரம்

விம்பிள்டன்: ஜாக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நோவக் ஜாக்கோவிச் விம்பிள்டன் தொடரின் 3வது சுற்றிலேயே வெளியேறியது அவரை மட்டுமின்றி, டென்னிஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிடைய செய்துள்ளது.

TNN 2 Jul 2016, 10:29 pm
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நோவக் ஜாக்கோவிச் விம்பிள்டன் தொடரின் 3வது சுற்றிலேயே வெளியேறியது அவரை மட்டுமின்றி, டென்னிஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிடைய செய்துள்ளது.
Samayam Tamil world no 1 novak djokovic crashes out of wimbledon 2016 in the third round
விம்பிள்டன்: ஜாக்கோவிச் அதிர்ச்சி தோல்வி


செர்பியாவை சேர்ந்தவரான நோவக் ஜாக்கோவிச், டென்னிஸ் அரங்கில் முன்னணி வீரராக வலம் வருகிறார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்ற கையோடு, தற்போது விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் களம் இறங்கினார்.

இதன்படி, இன்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் சாம் குர்ரே என்ற வீரரை எதிர்கொண்டார். ஆனால், ஆரம்பம் முதலே ஜாக்கோவிச், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால், 6-7, 1-6, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் சாம் குர்ரே வெற்றி பெற்று, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன்மூலமாக, விம்பிள்டன் தொடரில் கோப்பை வெல்லும் ஜோக்கோவிச்சின் கனவு முடிவுக்கு வந்தது. அவர் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் ஜோக்கோவிச் ஆதிக்கம் செலுத்திய நிலையில், திடீரென மழை குறுக்கிடவே போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்