இந்துார்: தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீரர் சுஷில் குமார் தங்கம் வென்று அசத்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்துாரில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சுஷில் குமார் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இறுதியில் இவரை எதிர்த்து போட்டியிட இருந்த வீரர்கள் காயத்தால் விலகினர். இதனால், சுஷில் போட்டியின்றி தங்கப் பதக்கம் பெற்றார்.
சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை போட்டியில் பங்கேற்றபோதும் தங்கம் வென்று தன் திறமையை நிரூபித்துள்ளார்.
பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் தங்கத்தைத் தட்டிச்சென்றார்.
பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் கீதா போகத்தும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். கீதா போகத்தின் கணவர் பவான் குமார் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்துாரில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சுஷில் குமார் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இறுதியில் இவரை எதிர்த்து போட்டியிட இருந்த வீரர்கள் காயத்தால் விலகினர். இதனால், சுஷில் போட்டியின்றி தங்கப் பதக்கம் பெற்றார்.
சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை போட்டியில் பங்கேற்றபோதும் தங்கம் வென்று தன் திறமையை நிரூபித்துள்ளார்.
பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் தங்கத்தைத் தட்டிச்சென்றார்.
பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் கீதா போகத்தும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். கீதா போகத்தின் கணவர் பவான் குமார் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.