ஆப்நகரம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ராஜேந்தர் குமாருக்கு வெண்கலப்பதக்கம்!

கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 28 Feb 2018, 1:51 am
கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil rajendra wins bronze in asian championships wrestling
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ராஜேந்தர் குமாருக்கு வெண்கலப்பதக்கம்!


கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நாட்டில், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில், 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி, மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், கிரேக்கோ ரோமன் பிரிவின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் தற்போது வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் ஜப்பான் நாட்டின் வீரர் ஷொட்டா தனோகுரா தங்கப்பதக்கத்தையும், கிர்கிஸ்தான் நாட்டின் வீரர் சோலாமன் ஷர்ஷென்பெகோ வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்