ஆப்நகரம்

வெற்றியை நெருங்கும் சாய்னா, ஸ்ரீ காந்த் !

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் சாய்னா மற்றும் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி அடைந்துள்ளனர்.

TNN 21 Oct 2017, 11:44 am
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் சாய்னா மற்றும் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி அடைந்துள்ளனர்.
Samayam Tamil sports person saina and srikanth get qualifies for quarter finals
வெற்றியை நெருங்கும் சாய்னா, ஸ்ரீ காந்த் !


டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 15-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை எதிர்கொண்டார். 42 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 22-20, 21-13 என்ற நேர்செட்டில் நிட்சான் ஜின்டாபோலை வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் 34-வது இடத்தில் உள்ள தென்கொரியா வீரர் ஜென் ஹயோக் ஜின்னை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 51 நிமிடம் தேவைப்பட்டது.

sports person saina and srikanth get qualifies for quarter finals

அடுத்த செய்தி

டிரெண்டிங்