ஆப்நகரம்

ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு; சுஷில் குமாரின் மனு தள்ளுபடி

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 6 Jun 2016, 4:32 pm
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil sushil kumars rio dreams over after delhi hc dismisses plea seeking trial
ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு; சுஷில் குமாரின் மனு தள்ளுபடி


மல்யுத்தப் பிரிவில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவந்த சுஷில்குமார், கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின் இதுவரை எந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக, அவர் விளையாடவில்லை. 66 கிலோ எடைப்பிரிவில் விளையாடிவந்த அவருக்கு, தற்போது 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும்படி விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா சார்பாக, 74 கிலோ எடைப்பிரிவுக்கான ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க, நர்சிங் யாதவ் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டார். எனவே, சுஷில்குமாருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இடம் இல்லை. இருந்தாலும், தனது திறமையை நிருபிக்கும் விதமாக, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நர்சிங் யாதவ் உடன் மோதுவதற்கு, ஒருமுறை வாய்ப்பு அளிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுஷில்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும், நர்சிங் யாதவ் ஏற்கனவே உரிய முறையில்தான், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதால், சுஷில்குமாரின் மனுவை நிராகரித்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவரது ரியோ ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்