ஆப்நகரம்

தோல்வியால் நடுவர் இருக்கையை அடித்து உடைத்த டென்னீஸ் வீராங்கனை

டென்னீஸ் போட்டியில் தோல்வி அடைந்ததால், செக் குடியரசை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஒருவர் நடுவரின் இருக்கையை அடித்து உடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2018, 12:25 pm
டென்னீஸ் போட்டியில் தோல்வி அடைந்ததால், செக் குடியரசை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஒருவர் நடுவரின் இருக்கையை அடித்து உடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tennis-cover-pic
நடுவர் இருக்கைக்கு தர்மடி கொடுத்த வீராங்கனை


இத்தாலி ஓபன் டென்னீஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் தலைநகரான ரோமில் நடைபெற்ற ஒரு போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா பில்ஸ்கோவா மற்றும் மார்தா மிரோஜின்ஸ்கா வீராங்கனைகள் விளையாடினர்.

கரோலினா பில்ஸ்கோவா, டென்னீஸ் வீராங்கனை



அப்போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கரோலினா பில்ஸ்கோவா எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத அவர், நடுவரை நெருங்கிய போது அவரது இருக்கையில் சரமாரியாக அடித்தார்.

இதன் காரணமாக நடுவரின் இருக்கையில் பொத்தல் விழுந்தது. செக் குடியரசின் கரோலினா பில்ஸ்கோவாவின் இந்த செயல் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரோலினாவுக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கவோ, அல்லது அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்