ஆப்நகரம்

காதலர் தினத்தில் இப்படியொரு முடிவா..? விவாகரத்தை அறிவித்த பிரபல நடிகை..!

பிரபல நடிகை ராக்கி சாவந்த் தனது காதல் கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Feb 2022, 6:35 pm
சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்கள் வரிசையாக தங்களின் விவாகரத்து முடிவை அறிவித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு முழுவதும் நாகசைதன்யா – சமந்தாவின் விவாகரத்து தான் சோசியல் மீடியாவில் டாப்பில் இருந்தது. அவர்களை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா உடைய விவாகரத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
Samayam Tamil Rakhi Sawant
Rakhi Sawant


இந்நிலையில் தற்போது பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ராக்கி சாவந்த். இந்தி மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் என் சகியே, முத்திரை, கம்பீரம் போன்ற சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.

ராக்கி சாவந்த் அண்மையில் பிக் பாஸ் சீசன் 15ல் கலந்து கொண்டார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரை குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்நிலையில் இன்று ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை பிரிந்து விட்டதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரெட்லைட் ஏரியாவுக்கு சென்ற பிரபல நடிகை: ரசிகர்கள் ஷாக்..!
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் சொல்ல விரும்புவது, நானும் ரித்தேஷும் மனமொத்து பிரிய முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்தன. அதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. நாங்கள் வேறுபாடுகளைக் கையாள முயற்சித்தோம். ஆனால் இருவரும் இணக்கமாக பிரிந்து செல்வது தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இருவரும் எங்கள் வாழ்க்கையை தனித்தனியாக அனுபவிக்கிறோம்.

View this post on Instagram A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

இது காதலர் தினத்திற்கு முன்பே நடக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு தினத்தில் முடிவெடுத்ததில், நான் மிகவும் வருத்தமாகவும் மனம் உடைந்ததாகவும் இருக்கிறேன். ரித்தேஷ் அவரது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். ஆனால் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான், எனது வேலை மற்றும் என் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். என்னை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். எப்போதும் என்னைப் புரிந்துகொண்டு ஆதரவளித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்