ஆப்நகரம்

நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்குப்பதிவு: பல கோடிகள் மோசடி செய்துள்ளதாக புகார்!

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது லக்னோ காவல் நிலையங்களில் புதிதாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2021, 4:14 pm
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் அதனைப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது புதிதாக மோசடி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Shilpa Shetty
Shilpa Shetty


கடந்த மாதம் கைது செய்யபட்ட ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீதும் புதிதாக லக்னோ காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. யோகாவில் ஆர்வமுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் `லோசிஸ் வெல்னஸ் சென்டர்' என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக் கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

என்மீதான குற்றசாட்டுகள் இழிவானவை, வெறுக்கத்தக்கவை: யோ யோ ஹனி சிங் வருத்தம்!
இதுதொடர்பாக லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கனி மற்றும் விபூதி கான்ஸ் காவல் நிலையங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த இந்த கம்பெனியில் அவர் தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவே இவர்கள் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை ஏகப்பட்ட ஆதாரங்களை திரட்டிய பின்னரே மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அண்மையில் அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீதும் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்