ஆப்நகரம்

கொரோனா தொற்று: 25 கோடி ரூபாய் அள்ளி கொடுத்த நடிகர் அக்ஷய் குமார்

கொரோனாவை சமாளிக்க அரசுக்கு அக்‌ஷய் குமார் 25 கோடி ருபாய் தருவதாக அறிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

Samayam Tamil 28 Mar 2020, 5:47 pm
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக போராட அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Akshay Kumar


இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ முன்வருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவுக்காக 25 கோடி ருபாய் அளிப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

"இந்த நேரத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். அதற்காக நாம் முடிந்த அனைத்தையம் செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பில் இருந்து நான் 25 கோடி ருபாய் நான் தருகிறேன். உயிர்களை காப்பாற்றுவோம்" என அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமார் இவ்வளவு பெரிய தொகை உதவியாக அளித்துள்ளதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.


பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் 52 லட்சம் ரூபாய் அளிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்