ஆப்நகரம்

'அன்பை விட விலை மதிப்பில்லாதது எதுவும் இல்லை': அக்ஷய்குமார்

அக்ஷய் குமார் அன்பை விட விலைமதிப்பில்லாதது எதுவும் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2019, 10:42 am
பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் அக்ஷய்குமார் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருந்தார். அதில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Samayam Tamil akshay kumar


இந்த நிலையில் அக்ஷய் குமார் தனது மகளுடன் சமீபத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது முதிய தம்பதிகள் இருவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பருகுவதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

டிரான்ஸ்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாஸ் காட்டும் நஸ்ரியா!

அப்போது அந்த தம்பதியினர் வீட்டிற்கு வந்த அக்ஷய்குமாருக்கு, தண்ணீரோடு சுவையான ரொட்டியையும் செய்து கொடுத்து அசத்தியுள்ளனர். இதனால் நெகிழ்ந்து போன அக்‌ஷய் குமார் அவர்களின் அன்பை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

View this post on Instagram Today’s morning walk turned into a life lesson for the little one. We walked into this kind, old couple’s house for a sip of water and they made us the most delicious gur-roti. Truly, being kind costs nothing but means everything! A post shared by Akshay Kumar (@akshaykumar) on Oct 31, 2019 at 2:02am PDT
அவர் கூறியிருப்பதாவது, 'அன்பு காட்டுவது மலிவுதான், ஆனால் அன்பை விட விலை மதிப்பில்லாதது எதுவுமில்லை.' என்று கூறி அத்தம்பதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

'இயலும்,இசையும், இணைந்தது': நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்த இளையராஜா - பாரதிராஜா!

அது மட்டுமின்றி அந்தத் தம்பதியினரின் இந்தச் செயல் தனது மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். அக்ஷய்குமார் இந்த ட்வீட் வெளியிட்ட சில மணி நேரத்தில் 16,000 பேர் மேல் லைக் செய்து ஷேர் செய்துள்ளனர். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்