ஆப்நகரம்

பலாத்கார முயற்சின்னு சொன்ன பிக் பாஸ் பிரபலம்: பொய்னு சொல்லும் அண்ணன்

சொந்த வீட்டிலேயே தான் பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக பிக் பாஸ் பிரபலம் ஆர்த்தி சிங் தெரிவித்தது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 16 Feb 2020, 3:14 pm
சொந்த வீட்டிலேயே தான் பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக பிக் பாஸ் பிரபலம் ஆர்த்தி சிங் தெரிவித்தது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
Samayam Tamil bigg boss 13 fame arti singh did not face rape attempt says brother krushna abhishek
பலாத்கார முயற்சின்னு சொன்ன பிக் பாஸ் பிரபலம்: பொய்னு சொல்லும் அண்ணன்


ஆர்த்தி சிங்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 13 இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி சிங் தன் வீட்டில் வேலை பார்த்த ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார். ஆர்த்தி கூறியதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்ததுடன், அவர் மீது பாவப்பட்டனர். இந்நிலையில் இது குறித்த உண்மையை அவர் அண்ணன் தெரிவித்துள்ளார்.

பொய்

ஆர்த்தியின் அண்ணனான நடிகர் க்ருஷ்ணா அபிஷேக் பேட்டி ஒன்றில் கூறியதாவது, என் தங்கை ஒரு ஃப்லோவில் அதிகமாகவே பேசிவிட்டார். அவரை பலாத்காரம் செய்ய முயற்சிக்கவில்லை. பலாத்கார முயற்சி நடக்கவிருந்தபோது அந்த பையன் ஓடிவிட்டான். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் தீவிரமாக தேடியும் அந்த பையனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது போவதா, வேண்டாமா என்று இருந்தார் ஆர்த்தி. அவருக்கு தன்னம்பிக்கை குறைவு. நான் அவரை பிக் பாஸ் வீட்டில் விட்டபோது இத்தனை நாள் தாக்குப்பிடிப்பார் என்று நினைக்கவே இல்லை. அவர் யாருடனும் படுக்கையை பகிரவில்லை. அவரின் கேரக்டரை யாரும் விமர்சிக்கும்படி நடக்கவில்லை என்று க்ருஷ்ணா கூறியுள்ளார்.

விளாசல்

ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் சொன்னது பொய் என்று தெரிய வந்ததும் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அவரை விளாசியுள்ளனர். பார்வையாளர்கள் பாவப்பட வேண்டும் என்று இந்த அளவுக்கா பொய் சொல்வது. நல்ல வேளை நீங்கள் டைட்டிலை ஜெயிக்கவில்லை. பொய் சொன்னதற்கு ஆண்டவனே தண்டனை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 13 டைட்டிலை சித்தார்த் சுக்லா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்