Bigg Boss Fame Rakhi Sawant Held In Sherlyn Chopra Case
Rakhi Sawant: சர்ச்சை நடிகையின் அந்தரங்க வீடியோ விவகாரம்: பிக் பாஸ் பிரபலம் கைது
Sherlyn Chopra:சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஷெர்லின் சோப்ரா அளித்த புகாரின்பேரில் பிக் பாஸ் பிரபலமான நடிகை ராக்கி சாவந்தை மும்பை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil20 Jan 2023, 11:41 am
Rakhi Sawant Arrested:நடிகை ஷெர்லின் சோப்ராவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட புகாரில் நடிகை ராக்கி சாவந்து கைது செய்யப்பட்டார்.
ஷெர்லின்
பிரேக்கிங் நியூஸ், நடிகையும், டான்ஸரும், பிக் பாஸ் பிரபலமுமான ராக்கி சாவந்தை மும்பை போலீசார் கைது செய்துவிட்டார்கள் என பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் முதல் தகவல் அறிக்கை குறித்த விபரங்களையும் வெளியிட்டார். தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையித்தில் புகார் அளித்திருந்தார் ஷெர்லின் சோப்ரா.
பிரேக்கிங் நியூஸ்
கைது
ஷெர்லின் சோப்ரா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் நடிகை ராக்கி சாவந்தை நேற்று கைது செய்தார்கள். ராக்கி சாவந்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது ஆஜராக வேண்டும் என்று தெரிவித்து அவரை பின்னர் விடுவித்தார்கள்.
வழக்கு
ராக்கி சாவந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராக்கி சாவந்தின் கைதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்த பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது புகார் தெரிவித்தார் ஷெர்லின் சோப்ரா. அதை பார்த்த ராக்கி சாவந்தோ, ஷெர்லின் போன்று பேசியதுடன், அவர் சஜித் கான் பற்றி கூறியது எல்லாம் பொய் என்றார்.
கோபம்
ராக்கி சாவந்த் கூறியதை கேட்ட ஷெர்லின் சோப்ரா கோபம் அடைந்தார். பதிலுக்கு அவர் கூறியதாவது, என்ன டிராமா இது?. நான்சென்ஸ். ஜிம் போங்க, கஷ்டப்பட்டு ஒர்க்அவுட் செய்து பாடியை டெவலப் பண்ணுங்க. ஆனால் நீங்களோ அதை எல்லாம் செய்யாமல், 24 மணிநேரமும் மீடியா-புகைப்படக் கலைஞர்கள் முன்பு தான் நிற்கிறீர்கள் என்று கிண்டலாக தெரிவித்தார்.
மோதல்
ஷெர்லின் சோப்ரா தன்னை கிண்டல் செய்ததை பார்த்த ராக்கி சாவந்த் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராக்கி சாவந்துக்கும், ஷெர்லின் சோப்ராவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மீ டூ புகாரில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது போலீசில் புகார் அளித்திருந்தார் ஷெர்லின் சோப்ரா. இந்நிலையில் சஜித் கானுக்கும், ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் ஆதரவு தெரிவித்தார் ராக்கி சாவந்த். அதை பார்த்த ஷெர்லின் கடுப்பாகி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.