ஆப்நகரம்

சூர்யா பட நடிகர் தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா கெஸ்ட் ஹவுஸில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 5:35 pm
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஆசிஃப் பஸ்ரா. கரீனா கபூரின் ஜப் வீ மெட், ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3, ராணி முகர்ஜியின் ஹிச்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். மேலும் மோகன் லாலின் பிக் பிரதர் மலையாள படத்திலும் நடித்திருக்கிறார் ஆசிஃப் பஸ்ரா.
Samayam Tamil asif basra


53 வயதாகும் ஆசிஃப் பஸ்ரா இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மெக்லியோட்கஞ்ச் பகுதில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பஸ்ராவின் மரணம் குறித்து அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிஃப் பஸ்ரா, இது உண்மையாக இருக்க முடியாது.. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று இயக்குநர் ஹன்சல் மேத்தா ட்வீட் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்த ஆசிஃப் ஸ்ரா நடிக்கும் ஆசையில் கடந்த 1989ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் தீராத நிலையில் ஆசிஃப் பஸ்ரா இப்படி செய்தது பாலிவுட் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

கமலா ஹாரிஸ் பற்றி 11 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த சிம்பு பட நடிகை?

அடுத்த செய்தி

டிரெண்டிங்