ஆப்நகரம்

பாடகி கனிகா கபூர் கொரோனா தொற்று உறுதி: லண்டன் சென்று வந்ததை மறைத்து 100 பேருக்கு பார்ட்டி கொடுத்தது அம்பலம்

பிரபல இந்தி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என வந்துள்ளது. லண்டன் சென்று வந்ததை அவர் மறைத்த விஷயம் அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 20 Mar 2020, 3:39 pm
கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil Singer Kanika Kapoor


இந்நிலையயில் லண்டனுக்கு சென்று மார்ச் 15ம் தேதி இந்தியா திருப்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

லக்னோ விமான நிலையம் வந்திறங்கியதும் அவர் அதிகாரிகளின் கொரோனா சோதனையில் இருந்து எப்படி தப்பினர் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது? இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா ஏதோ ஒரு வழியில் தப்பியுள்ளார்.

தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். அந்த பார்ட்டியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 100 பிரபலங்கள் வரை அந்த பார்ட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கனிகா ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவர் இதை மறைத்ததால் அந்த அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அந்த கட்டிடம் முழுவதையும் தனிமை படுத்தவுள்ளனர் என கூறப்படுகிறது.

மற்றவர்களின் வாழ்க்கையையும் இப்படி கேள்விக்குறியாக்கியுள்ள கனிகா கபூருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.



அடுத்த செய்தி

டிரெண்டிங்