ஆப்நகரம்

நான் மசால் தோசை சுட கத்துக்கிட்டேனே: பிரபல நடிகை மகிழ்ச்சி

கொரோனா வைரஸால் எங்கும் செல்ல முடியாத நிலையில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மசால் தோசை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 27 Mar 2020, 5:19 pm
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து வீடுகளில் முடங்கியிருக்கும் பாலிவுட் பிரபலங்கள் முழுநேரமும் சமூக வலைதளங்களில் தான் உள்ளனர். என்ன செய்தாலும் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.
Samayam Tamil preity zinta


இந்நிலையில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் மசால் தோசை செய்யக் கற்றுக் கொண்டுள்ளார். அதை புகைப்படம் எடுத்து அவர் ட்விட்டரில் வெளியிட்டு 16 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.


ப்ரீத்தியின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

சூப்பர். நீங்கள் தோசை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வீட்டில் இருப்பதால் என் மனைவி எனக்கு சமைக்க கற்றுக் கொடுத்துவிட்டாள். வீட்டில் சும்மாத் தான இருக்க, சமையல் செய் என்கிறாள்.

பலர் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்க, நீங்கள் ஜாலியாக சமைக்கிறீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும். வைரஸ் பரவுவதால் பார்த்து பத்திரமாக இருங்க.

படங்கள் மூலம் நிறைய சம்பாதித்திருப்பீர்கள். தற்போது நிதி அளித்து உதவவும் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்