ரன்வீர் சிங்
கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். ஓவர் ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இன்ஸ்டாகிராமில் ஏதாவது போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார். தான் மனைவி தீபிகா படுகோனுடன் சேர்ந்து வீட்டில் ஒர்க்அவுட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை ரன்வீர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
javascript-Instagram
கணவன், மனைவி
ரன்வீர் சிங் எந்த போஸ்ட் போட்டாலும் தீபிகா ஒன்று அவரை கலாய்த்து கமெண்ட் போடுவார் இல்லை என்றால் ஸ்வீட்டாக கமெண்ட் போடுவார். ஆளுக்கு ஒரு இடத்தில் இருந்தபோது கமெண்ட் போட்டார்கள் சரி. ஆனால் தற்போது ஒரே வீட்டில் இருந்து கொண்டும் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போடுகிறார்கள். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் செய்யும் அலப்பறைகளால் தான் ரசிகர்கள் பலருக்கு பொழுது போகிறது.
தீபிகா
ரன்வீர் சிங் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த பிறகு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த தீபிகா ஸ்நாக் என்று கமெண்ட் போட்டார். என்னாது ரன்வீரை பார்த்தால் உங்களுக்கு ஸ்நாக் மாதிரி தெரிகிறதா என்று ரசிகர்கள் கேட்டார்கள். அதற்குள் ரன்வீரே முந்திக் கொண்டு, தன் மூக்கு பக்கோடா போன்று இருப்பதால் தீபிகா அப்படி சொல்லியதாக கமெண்ட் போட்டார்.
சேட்டை
ரன்வீருக்கு வீட்டில் சுத்தமாக பொழுது போகவில்லை. அதனால் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். தீபிகா சும்மா இருக்கும் நேரத்தில் பியானோ வாசித்ததையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார் ரன்வீர். இதை பார்த்த ரசிகர்களோ, நாங்களும் வீட்டில் சும்மா தான் இருக்கிறோம், எங்களுக்கும் பொழுது போக வேண்டும். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று ரன்வீரிடம் தெரிவித்துள்ளனர்.
வைரஸும் அமாவாசையும்: ட்வீட் செய்த சூப்பர் ஸ்டாரை விளாசிய நெட்டிசன்ஸ்