ஆப்நகரம்

அந்த பிரச்சனை மறுபடியும் வந்துடுமோனு பயமா இருக்கு: தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் மன அழுத்தம் பற்றி பேசியது பற்றி தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 4:30 pm
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் தீபிகா படுகோன், மேலும் ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
Samayam Tamil deepika padukone


பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகு தீபிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சாபக் படத்தை தயாரித்து நடித்தார் தீபிகா. மேலும் தன் கணவருடன் சேர்ந்து 83 படத்தில் நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்றது பற்றிய படம்.

தீபிகா தன் மனநலம் பற்றி பேச எப்பொழுதுமே தயங்கியது இல்லை. தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு கஷ்டப்பட்டதாகவும், அதற்கு உரிய சிகிச்சை பெற்று குணமானதாகவும் தீபிகா பலமுறை தெரிவித்துள்ளார். அவர் மன அழுத்த பிரச்சனை குறித்த தன் பயம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியது பற்றி தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது.

அந்த பேட்டியில் தீபிகா படுகோன் கூறியதாவது,

மன அழுத்தம் என் வாழ்க்கையில் மோசமான காலகட்டம். அதை மீண்டும் எதிர்கொள்ள விரும்பவில்லை. மனநலனில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். உடல் நலனை விட மனநலம் தான் எனக்கு முக்கியம்.

மீண்டும் மனஅழுத்தம் ஏற்படுமோ என்கிற பயம் இருந்து கொண்டே இருக்கிறது. என் உடல்நலனை பேணுவது போன்று தான் மனநலத்திலும் கவனம் செலுத்துகிறேன்.

வேலை இருக்கிறது, இல்லை வேறு காரணம் சொல்லி ஒர்க்அவுட் செய்வது, ஜிம்முக்கு செல்லாமல் இருக்கும் ஆள் நான் இல்லை. மீண்டும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. மனநலம் பேணுவது என் லைஃப்ஸ்டைலில் ஒரு பகுதி என்றார்.

தீபிகா அடிக்கடி மனநலம் பற்றி பேசுவதை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் மன அழுத்த பிரச்சனையை வைத்து தீபிகா விளம்பரம் தேடுவதாக சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தீபிகா மன அழுத்தம் குறித்து ட்வீட் செய்தார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் தீபிகாவை மோசமாக விமர்சித்தார்கள்.

4 முறை 'நோ' சொன்ன காதலி, நம்பிக்கையை இழக்காத வாரிசு நடிகர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்