ஆப்நகரம்

Raj Kundra:ஆபாச பட வழக்கை அடுத்து நடிகை ஷில்பாவின் கணவர் மீது மேலும் ஒரு வழக்கு

தொழில் அதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 19 May 2022, 9:58 am
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
Samayam Tamil ed files money laundering case against shilpa shettys husband raj kundra
Raj Kundra:ஆபாச பட வழக்கை அடுத்து நடிகை ஷில்பாவின் கணவர் மீது மேலும் ஒரு வழக்கு


ராஜ் குந்த்ரா

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து விநியோகம் செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை

ஆபாசப்பட வழக்கு தொடர்பாக ராஜ் குந்த்ரா மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது அமலாக்கத்துறை. முன்னதாக 2021ம் ஆண்டும் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் பண மோசடி வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை

ஆபாசப்பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ரா 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். தான் குற்றமற்றவன் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ராஜ் குந்த்ரா. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பொய் என்கிறார்.

மும்பை

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார் ராஜ் குந்த்ரா. பொது இடங்களுக்கு வந்தாலும் முகம் தெரியாத அளவுக்கு மாஸ்க் அணிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த பட விழாவில் ஷில்பா ஷெட்டியிடம் ராஜ் குந்த்ராவின் வழக்கு பற்றி கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்