பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தால் சுஷாந்த் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலிவுட் பிரபலங்களும், மற்றவர்களும் சமூக வலைதளங்களில் மன நலம் பற்றியும், மன அழுத்தம் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலையோரம் பலூன் விற்றவர்களை மதித்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்த்து சந்தோஷப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, நல்லவர்களுக்கு தான் சீக்கிரம் மரணம் வருமா. இதை பார்க்க பார்க்க அழாமல் இருக்க முடியவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட் எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்ததை பார்த்து அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தவறாக நினைத்துவிட்டோமே.
சுஷாந்த் கஷ்டப்பட்டபோது எல்லாம் அவரை கண்டுகொள்ளாமல் அவர் இறந்த பிறகு என்னிடம் பேசியிருக்கலாமே, உன்னிடம் பேசியிருக்கலாமே என்கிறார்கள். ஒருவர் அல்லாடியபோது அவரை தனியாகவிட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிந்ததும் ஆறுதலாக ட்வீட் போடுவதில் என்ன அர்த்தம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
லாக்டவுனுக்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட்டை பிரபல புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார். சுஷாந்த் சிரித்த முகமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அந்த புகைப்படக் கலைஞர் கூறியிருப்பதாவது,
லாக்டவுனுக்கு முன்பு எடுத்த புகைப்படம். இது தான் அவரின் கடைசி புகைப்படம் என்று எங்களுக்கு தெரியாது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து நண்பர்கள், குடும்பத்தார் அல்லது நிபுணர்களிடம் பேசவும். மன அழுத்தத்தால் அவதிப்படுவதை ஒப்புக் கொள்வது குற்றம் இல்லை. முன்னணி நடிகையான தீபிகா படுகோன் கூட தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்றார்.
இதற்கிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பாலிவுட் இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் கூறியிருப்பதாவது,
என் நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இளம் வயதில் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்வதை நிறுத்தவும். இது டிராஜெடி, பொழுதுபோக்கு அல்ல. இது தான் நாம் வாழும் உலகமா என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் உடலை துணியை போட்டு மூடி ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லும் புகைப்படங்கள் மற்றும் அவர் இறந்த உடன் எடுத்த புகைப்படமும் தான் அதிக அளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யக் கூடாது என்றும், ஏற்கனவே வெளியிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி புகைப்படங்களை ஷேர் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலையோரம் பலூன் விற்றவர்களை மதித்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்த்து சந்தோஷப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, நல்லவர்களுக்கு தான் சீக்கிரம் மரணம் வருமா. இதை பார்க்க பார்க்க அழாமல் இருக்க முடியவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட் எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்ததை பார்த்து அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தவறாக நினைத்துவிட்டோமே.
லாக்டவுனுக்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட்டை பிரபல புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார். சுஷாந்த் சிரித்த முகமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அந்த புகைப்படக் கலைஞர் கூறியிருப்பதாவது,
லாக்டவுனுக்கு முன்பு எடுத்த புகைப்படம். இது தான் அவரின் கடைசி புகைப்படம் என்று எங்களுக்கு தெரியாது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து நண்பர்கள், குடும்பத்தார் அல்லது நிபுணர்களிடம் பேசவும். மன அழுத்தத்தால் அவதிப்படுவதை ஒப்புக் கொள்வது குற்றம் இல்லை. முன்னணி நடிகையான தீபிகா படுகோன் கூட தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்றார்.
என் நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இளம் வயதில் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்வதை நிறுத்தவும். இது டிராஜெடி, பொழுதுபோக்கு அல்ல. இது தான் நாம் வாழும் உலகமா என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் உடலை துணியை போட்டு மூடி ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லும் புகைப்படங்கள் மற்றும் அவர் இறந்த உடன் எடுத்த புகைப்படமும் தான் அதிக அளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யக் கூடாது என்றும், ஏற்கனவே வெளியிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி புகைப்படங்களை ஷேர் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.