ஆப்நகரம்

24 மணிநேரத்தில் 2 மரணம்: 2020 இதை விட மோசமாக முடியுமா?

ரிஷி கபூரின் மரண செய்தி அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் 2020ம் ஆண்டு இதை விட மோசமாக இருக்க முடியுமா என்று தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 30 Apr 2020, 11:18 am
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.45 மணிக்கு உயிர் இழந்தார். அவரின் மரண செய்தி அறிந்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil rishi kapoor


ரிஷி கபூர் இறந்துவிட்டார், I am destroyed என்று மனமுடைந்து ட்வீட் செய்துள்ளார் பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சன்.

ரிஷி கபூரின் மரணம் குறித்து ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இந்த இழப்பை விவரிக்க வார்த்தையே இல்லை. நேற்று இர்ஃபான், இன்று ரிஷி, நம்பவே முடியவில்லை. இது வதந்தியாக இருக்கக் கூடாதா?

நடிகர் ரிஷி கபூர் மரணம்: நேற்று இர்ஃபான், இன்று ரிஷி- கவலையில் பாலிவுட்

24 மணிநேரத்தில் இரண்டு மரணம். 2020ம் ஆண்டு இதை விட மோசமாக முடியாது. இதில் வேதனை என்னவென்றால் கொரோனா லாக்டவுனால் ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் யாராலும் பங்கேற்க முடியாது.

நேற்று இர்ஃபானையும் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போனது. மனமுடைந்து போயிருக்கிறோம். மேலும் ஏதாவது அதிர்ச்சி அளிக்கும் செய்தி வராமல் இருந்தால் சரி.

இர்ஃபானும், ரிஷி கபூரும் ஏதோ நல்ல இடத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். இந்திய சினிமாவுக்கு இரண்டு பேரிழப்புகள் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்