ஆப்நகரம்

ட்விட்டரில் கணவருடன் மோதிய ஜெனிலியா: பப்ளிக், பப்ளிக் என்ற ரசிகர்கள்

நடிகை ஜெனிலியா சமூக வலைதளத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் மீம்ஸ் சண்டை போட்டுள்ளார்.

Samayam Tamil 23 Sep 2019, 4:52 pm
நடிகை ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Samayam Tamil genelia


திருமணம், குழந்தைகள் என்றான பிறகு முழுநேரம் நடிப்பில் கவனம் செல்லத்தாமல் இருந்தார் ஜெனிலியா. இந்நிலையில் அவர் மீண்டும் முழுநேரம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே ரித்தேஷ் தேஷ்முக்கோ ஜெனிலியாவின் பெயரை போட்டு, கோபப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் தான் என்ன தவறு செய்தோம் என்பது தெரியாத ஒரு ஆண் இருப்பார் என்று புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.



அதை பார்த்த ஜெனிலியாவோ, நான் என் கணவர் கூறுவதை வழக்கமாக பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் நான் கண்டுகொண்டால் அவர் மீது தான் தவறு என்று பதில் அளித்தார்.



ரித்தேஷ், ஜெனிலியாவின் செல்ல சண்டையை பார்த்த ரசிகர்களோ, மனைவியிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை. மனைவி ஏதாவது சொன்னால் சரி, சரி என்று செல்வது தான் நல்லது ரித்தேஷ் என்று அறிவுரை வழங்கியுள்ளனர். கணவன், மனைவி மோதிக் கொள்வது வீட்டிற்கு வீடு நடக்கத் தான் செய்கிறது. அதை ஆன்லைனில் செய்து ஊர், உலகம் எல்லாம் பார்க்கும்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட இலியானா: வாவ், வவ்வாவ் எனும் ரசிகர்கள்

இந்நிலையில் ஜெனிலியா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, நான் குழந்தையை போன்று தூங்க விரும்பவில்லை...என் கணவர் போன்று தூங்க விரும்புகிறேன் என்றார். அதை பார்த்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நிறைய ஸ்மைலிகளை கமெண்ட் பகுதியில் போட்டார்.

View this post on Instagram @riteishd 😛😛😛 A post shared by Genelia Deshmukh (@geneliad) on Sep 22, 2019 at 3:48am PDT

ஜெனிலியாவின் போஸ்ட்டை பார்த்தவர்கள் என்னம்மா, ரித்தேஷ் குறட்டை விடுவாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்