ஆப்நகரம்

ரூ. 97.50 கோடிக்கு பென்ட் ஹவுஸ், அபார்ட்மென்ட் வாங்கிய ஹேன்ட்சம் ஹீரோ

ரித்திக் ரோஷன் ரூ. 97.50 கோடிக்கு இரண்டு வீடுகள் வாங்கியிருக்கிறாராம்.

Samayam Tamil 25 Oct 2020, 4:23 pm
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நாடு முழுவதும் பிரபலமானவர். அவருக்கு ரசிகர்களை விட ரசிகைககளே அதிகம். ரித்திக் ரோஷன் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் பிற மொழி பேசும் ரசிகர்கள், ரசிகைகள் அவரை கொண்டாடுகிறார்கள்.
Samayam Tamil hrithik roshan


ரித்திக்கை பார்க்க மற்றும் அவரின் நடனத்தை ரசிக்கவே மொழி தெரியாவிட்டாலும் அவரின் படங்களை பிற மொழி ரசிகைகள் பார்க்கிறார்கள். நடனம் ஆடுவதில் ரித்திக் ரோஷன் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரித்திக் ரோஷன் மும்பையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு வீடுகள் வாங்கியிருக்கிறார்.

ரூ. 97.50 கோடிக்கு பென்ட் ஹவுஸ் மற்றும் அபார்ட்மென்ட்டை வாங்கியிருக்கிறார் ரித்திக். கடந்த வாரம் தான் இது தொடர்பான டீலிங் முடிந்ததாம். வாடகை வீட்டில் வசித்து வரும் ரித்திக் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்து கடைசியில் இரண்டு வீடுகள் வாங்கியிருக்கிறார்.

15 மற்றும் 16வது மாடிகளில் இருக்கும் பென்ட் ஹவுஸின் விலை ரூ. 67.50 கோடி ஆகும். 14வது மாடியில் இருக்கும் அபார்ட்மென்ட்டுக்கு ரூ. 30 கோடி கொடுத்துள்ளார் ரித்திக்.

ரித்திக் குடும்பத்திற்கு என்று தனியாக லிஃப்ட் வசதி இருக்கிறதாம். அவர்களுக்காக கார் நிறுத்தும் இடத்தில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அரபிக் கடலை பார்த்தபடி இருக்கும் அந்த அபார்ட்மென்ட்டின் பத்திரப்பதிவு முடிந்துவிட்டது. ஸ்டாம்ப் டியூட்டிக்காக ரித்திக் ரோஷன் ரூ. 1.95 கோடி கொடுத்துள்ளாராம்.

ரித்திக் ரோஷன் இரண்டு வீடுகள் வாங்கியிருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ரித்திக் ரோஷனுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரித்திக்கும், அவரின் மனைவி சூசனும் கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிந்துவிட்டார்கள்.

விவாகரத்திற்கு பிறகும் பிள்ளைகளுக்காக ரித்திக்கும், சூசனும் அவ்வப்போது சந்தித்து வந்தார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் லாக்டவுன் அமலுக்கு வரவே, ரித்திக் தன் மகன்களை மிஸ் பண்ணக் கூடாது என்று அவர் வீட்டிற்கே வந்துவிட்டார் சூசன்.

சூசன் தன் மகன்களுடன் ரித்திக் வீட்டில் தான் தங்கியிருக்கிறார். ரித்திக்கும், சூசனும் மீண்டும் சேரப் போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

ஒரே டார்ச்சர், எனக்கு ஏதாவது ஆச்சுனா அந்த இயக்குநர் தான் காரணம்: நடிகை புகார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்