ஆப்நகரம்

'எனது அலமாரியில் எலும்பு கூடுகள் இல்லை' .. நடிகை டாப்ஸி பரபரப்பு பேட்டி

நடிகை டாப்ஸி தன் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் அதிரடியாக பேசி உள்ளார்.

Samayam Tamil 8 Mar 2021, 11:44 pm
வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி.. தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை என்றாலும் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஆண்டுக்கு சராசரியாக 4 படங்கள் கொடுத்து வரும் டாப்ஸி. கடந்த 6 மாதங்களில் மட்டும் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது 5வது படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.
Samayam Tamil Taapsee Pannu


படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் டாப்ஸி.. இந்நிலையில் நடிகை டாப்ஸி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது... இந்த சோதனையில், 650 கோடி ரூபாய் வரை வருமான வரி மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின...
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டாப்ஸியும், அனுராக் காஷ்யப்பும் குரல் கொடுத்திருந்தனர்.. இதன் காரணமாகவே அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக டாப்ஸி, அனுராக் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை முடிவடைந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அதைப்பற்றி வரிசையாக கருத்துக்கள் பதிவிட்டு பரபரப்பை கூட்டியிருந்தார் நடிகை டாப்சி...'வாங்காத வெளிநாட்டு வீட்டின் சாவியை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடினார்கள், ஆனால் அது கிடைக்கவில்லை' ... அதே போல 'நான் வேண்டாமென சொன்ன 5 கோடி ரூபாய்க்கான செக்கையும் தேடி அலைந்தனர், அதுவும் கிடைக்கவில்லை' என கிண்டலடித்து கருத்துக்கள் பதிவிட்டு இருந்தார் நடிகை டாப்ஸி.

அதை தொடர்ந்து நடிகர் அனுராக் காஷ்யப்பும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், நடிகை டாப்சியின் மடியில் அமர்ந்து கொண்டு' தோபாரா' படத்தை நாங்கள் ஆரம்பித்து விட்டோம், ஹேட்டர்ஸ்க்கு நன்றி என செம கூலாக பதிவிட்டு கலாய்த்திருந்தார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி, தனது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.. அதில், பேசியுள்ள டாப்ஸி, நான் எப்போதும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன். மக்களுக்கு என் மீது நம்பிக்கை வந்ததற்கான காரணம் எனது கடின உழைப்பு... இப்போது, நான் யார் என்பதை மக்கள் புரிந்திருப்பார்கள்.. எனது கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை. என்னுடைய நேர்மை எனக்கு அச்சமின்றி இருப்பதற்கான நம்பிக்கையை தருகிறது.

ஒரு பொய்யை அதிக பொய்களால் மறைக்க நிறைய முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்வது நல்லது , ஆனால் அது மற்றவர்களை காயப்படுத்த கூடாது.. என தனது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை டாப்ஸி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்