ஆப்நகரம்

அல்லாஹ்வுக்காக மதபோதகரை திருமணம் செய்து கொண்டேன்: விஷால் பட நடிகை

திரைத்துறையில் இருந்து விலகிய சனா கான் குஜராத்தை சேர்ந்த மதபோதகர் முஃப்தி அனஸை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 23 Nov 2020, 8:34 am
ஜீவாவின் ஈ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த சனா கான் அண்மையில் தான் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
Samayam Tamil sana khan


இந்நிலையில் அவர் கடந்த 20ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் தன் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சனா கான் கூறியிருப்பதாவது,
View this post on Instagram A post shared by Sayied Sana Khan (@sanakhaan21)
அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் காதலித்தோம். அல்லாஹ்வுக்காக திருமணம் செய்து கொண்டுள்ளோம். இந்த வாழ்க்கையில் அல்லாஹ் எங்களை ஒன்றாக வைத்திருந்து மறுமையிலும் ஒன்று சேர்க்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

சனா கானின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் சனா. ஆனால் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இப்படி மாறுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக சனா கானும், கணவரும் திருமண உடையில் கேக் வெட்டும் வீடியோ வெளியானது. அதன் பிறகே தனக்கு திருமணம் நடந்ததை உறுதி செய்துள்ளார் சனா கான்.

மத காரணத்திற்காக திரையுலகை விட்டு விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார் சனா கான். திரையுலகை விட்டு விலகுவது குறித்து சனா கான் முன்பு கூறியதாவது,

சினிமாவுக்கு குட்பை, அல்லாஹ் எனக்கு வழிகாட்டட்டும்: சிம்பு பட நடிகை அறிவிப்பு
https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sana-khan-leaves-film-industry/articleshow/78571909.cms

இறந்த பிறகு எனக்கு என்னவாகும் என்ற கேள்விக்கான பதிலை தேடுகிறேன். இந்த கேள்விக்கான பதிலை என் மதத்தில் தேடியபோது, மறுமை வாழ்க்கையை மேம்படுத்த தான் இந்த உலக வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். இறைவன் ஆணைப்படி வாழ்வது தான் சரி. புகழும், பணமும் மட்டுமே முக்கியம் இல்லை.

எனவே, இன்றில் இருந்து என் திரையுலக வாழ்க்கைக்கு முழுக்கு போடுகிறேன். இறைவனின் ஆணையை பின்பற்றப் போகிறேன், மனிதர்களுக்கு சேவை செய்யப் போகிறேன். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

திரையுலக வேலை குறித்து யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்