ஆப்நகரம்

15 வருஷமா நான் வாயே திறக்கல: சிறைவாசம் பற்றி பிரபல நடிகர் பேட்டி

சிறையில் இருந்தது தொடர்பாக முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ராஜ்பல் யாதவ்.

Samayam Tamil 14 Oct 2020, 3:26 pm
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பல் யாதவ் ஸ்ரீ நவ்ரங் கோதாவரி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் சார்பில் படம் எடுக்க கடந்த 2010ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த முரளி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் ரூ. 5 கோடி கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை யாதவ் திருப்பிக் கொடுக்கவில்லை என்று முரளி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
Samayam Tamil rajpal yadav


அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ராஜ்பல் யாதவுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து யாதவ் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.

சுமார் 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார் ராஜ்பல் யாதவ். அவர் இதுவரைக்கும் சுமார் 200 படங்களில் நடித்திருக்கிறார். சிறையில் இருந்தது பற்றி ராஜ்பல் யாதவ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

என்னை காத்துக் கொள்ள நான் கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் சொல்லவில்லை. நான் நெகட்டிவாக யோசிப்பது இல்லை. யார் நெகட்டிவ், யார் பாசிட்டிவ் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு என் வேலை பற்றி தெரியும். வேலை என்று ஒன்று இருந்தால் கர்மா இருக்கும். நான் சிறு வயதில் இருந்தே என் கர்மாவை செய்துள்ளேன். எது பாசிட்டிவ், எது நெகட்டிவ் என்று தெரியவில்லை. கடந்த காலத்தின் சுமையை சுமக்க விரும்பவில்லை.

மக்கள் அவர்கள் விரும்புவதை செய்யட்டும். என் வேலை பிடித்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைக்கும். எல்லாம் வாழ்க்கையை பற்றியது தான். ஒவ்வொரு நாளும் சூரியனின் கதிர்கள் வித்தியாசமாக இருப்பது போன்று தான் இந்த ராஜ்பல் யாதவும். என் கிரியேட்டிவிட்டிக்காக மக்கள் ஏற்றுக் கொண்டனர். எனக்கு ரசிகர்களின் அன்பு கிடைத்தது. எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அக்ஷய் குமாரின் பூல் புலய்யா படத்தில் நாந் நடித்த சோட்டே பண்டிட் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் இயக்குநரின் கற்பனையே. நான் அந்த கதாபாத்திரத்தில் நேர்மையாக நடித்தேன். கடந்த 20 ஆண்டுகளாக நான் யாருடன் பணியாற்றினேனோ, அதை எல்லாம் விரும்பியே செய்தேன். ப்ரியதர்ஷன் எனக்கு 77 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். நான் இயக்குநர் சொல்வதை மதிப்பவன் என்றார்.

மொழி, கலாச்சாரத்தை அழிக்கும் பாலிவுட் மீது கேஸ் போடலாமா?: பிரபல இயக்குநர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்